Saturday, September 25, 2010

உடம்பு, உயிர், மனம்


பொதுவாக மனிதன் என்ற சொல், மனம் என்ற அடிச்சொல்லைக் கொண்டே பிறந்தது.  மனதை உடையவன் மனத்தன்.  இந்த மனத்தன் என்றசொல் திரிந்து மனிதன் என்று ஆயிற்று.

மனம் என்பது என்ன? என்பது ரொம்ப நாள் ஆய்வில் இருக்கின்ற விஷயம். இது கண், இது கை, இது வாய் என்று ஒவ்வொரு உறுப்பையும் சுட்டிக்காட்டுவது போல் இது மனம் என்று சுட்டிகாட்ட என்ன இருக்கிறது?

மனம் என்பதற்கு இதுவர நேரிடையான பதிலை எவரும் சொல்லவில்லை. மனம் என்பது மூளையின் இயக்கம். மனம் எங்கே இருக்கிறது? மனம் நமது தலைக்குள்ளாகவா இருக்கிறது? ஆம் என்கிறார்கள் அறிஞர்கள். எப்படி இதயம் மார்பு கூட்டுக்குள்ளே இருபதை போல், மனம் தலைக்குள்ளாக இருக்கிறது.

மனம் ஒன்றை சிந்திக்கிறது. அதே மனம் அந்த சிந்தனை பற்றிய எச்சரிக்கையும் செய்கிறது. மனதுக்கு ஏன் இந்த குழப்பம். அதற்கு காரணம்: மனம் மூன்று நிலைகளில் இயங்குகிறது. இந்த மூன்று நிலையான இயக்கங்களிலும் மூளையின் மூன்று பகுதிகள் வேலை செய்கின்றன. அவை, மேல்மனம், நடுமனம், அடிமனம்(Concious mind, sub concious, unconcious --or-- ID, Ego, Super Ego) என்ற மூன்று பிரிவுகளாகும். தற்கால உளவியல் அறிஞர்கள் இந்த மேல், நடு, அடிமன செயல்பாடுகளோடு விளக்கங்களை முடித்துவிடுகின்றனர். இதோடு மனம் என்பதை அப்படியே விட்டுவிட்டு, மனதை மேம்படுத்தலாம், எண்ணங்களை உயர்த்திக் கொள்ளலாம், நல்ல எண்ணங்களை வளர்பதால், நன்மைகளை அடையலாம், மனதின் ஆபாரபலம், மறைந்திருக்கும் மனித சக்தி என்றெல்லாம் தாவி விடுகின்றார்கள்.  மனிதமனம் என்று எழுத வருகின்ற போது இம்மாதிரியான அலங்கார விஷயங்களே நூலை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன.

சில மேனாட்டு அறிஞர்கள் கூட மனத்தின் நிலைகளை பற்றிப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து எழுதி இருந்தாலும், அவர்களுடைய எழுத்தும்; மனோசக்தியால் நோய்களை தீர்த்துக்கொள்ளலாம், வளைந்த காலை நிமிர்த்தி கொள்ளலாம், காற்றில் பறக்கலாம், தண்ணீரில் நடக்கலாம் என்று திசைமாறிப் போய்விடுகிறது.

மற்றும் சிலர் மேல், நடு, அடிமனம் (Id, Ego, Super Ego) அது இது என சொல்லி மலைத்துகொண்டும், மலைப்பை உண்டாக்கிக் கொண்டும் எழுதிக்கொண்டும் போகிறார்களேயொழிய மனதை பற்றி ஒன்றும் விளங்கி கொள்ளுவது போல் எந்த எழுத்தும் இல்லை.

மூளை ஆராய்ச்சி நிபுணர்கள்; மனம் எனப்து மனித மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருக்கிறது என்றும்; இல்லை, மூளையின் செரிப்ரம் என்ற பகுதிதான் மனம் என்றும்; அதுவும் இல்லை மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம்தான் என்றும், கிடையாது, ரெட்டிக்குலர் ஃபார்மேஷன் என்ற பகுதிதான் மனதின் ஜீவ நாடி என்றும் பல்வேறு வகையில் நாளுக்குநாள், மனதைப் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து வெளிட்டுக் கொண்டு இருகிறார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனம் எனப்து மூளையின் இயக்கம்தான் என்று ஒரளவுக்கோ அல்லது உறுதியாகவோ ஒப்புகொண்டு இருப்பதோ அல்லது ஒப்புக் கொள்ள யோசிப்பதோ வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

இதற்குமேல் விஞ்ஞானிகள் மனதின் மூன்று நிலைகளோடு ஒவ்வொரு நிலையையும் மூளையின் எந்த பகுதியாக இயங்குகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய எதிர்காலப் பொறுப்புகளோடு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யோகசாஸ்திரம் மனதைப் பற்றியும், மூளையைப் பற்றியும் சொல்லி முடித்துவிட்டு இருப்பதை விஞ்ஞானம் கவனித்தால அது அவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். இந்த அடிப்படைச் செய்திகளை கொண்டு விஞ்ஞானம் தனது ஆராய்ச்சியை எளிதாக தொடர்வதோடு அரிய மிகபெரிய உண்மைகளை அது உலக்குக்கு தரும் என்பதில் ஐயமில்லை

மொத்தத்தில்; உடம்பு, உயிர், மனம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த மூன்றில் எது தாக்கத்திற்கு ஆளானாலும் மற்ற இரண்டும் தாக்கத்திற்கு ஆளாகும். இது நமது உடம்பைப்பற்றிய மாறாத ஒரு அடிப்படை உண்மையாகும்.

இந்த அடிப்டை உண்மையின் பேரில் மானுட உடம்பு, உயிர், மனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறொம்.

1 comment:

  1. அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி தங்களின் நல்வரவுக்கும் ஊக்கம், மற்றும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete