Tuesday, September 14, 2010

நாம் நினைப்பது எப்படி நடக்கிறது?


விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருச்ச்ந்தாலும்,  அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்சிகளை ஒரே நேரத்தில் ஒலிப்பரப்புகின்றன.  நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்: எங்கே போனாலும் நம்க்கு வெற்றியாகவே இருக்கும்.


அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்த தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. “நம்மை திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, “என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்த காலத்தில் எந்தச்சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அதுதானாகவே நடந்துவிடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge).அதனால், அந்த இடத்திருந்து நாம் எண்ணி எண்ணத்திற்க்குரிய காலமும் வேகமும் வரும் போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

4 comments:

  1. அன்புச் சகோதரர் ஹைஷ்!
    எமது எண்ண அலைகள் எப்படி ஈடேறுகிறது என்பது பற்றி மிக நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்.

    எம் எண்ண அலைகளை ஒத்திராத அடுத்தவரின் எண்ண அலைகள் எம்மை தடுமாற செய்யும்போது அதை புரிந்துகொண்டு அமைதியாக இருந்தால் அவரின் எதிர் எண்ண அலைகள் எம்மை குழப்பாமல் எம்மை எமது வழியில் இருந்திட, செயல்படச் செய்திடும்.
    இப்படி நான் புரிந்திருப்பது சரியா?

    நேரமிருப்பின் முற்றறிவு, தொகுப்பறிவு பற்றி மேலும் அறிய தந்தால் உதவியாக இருக்கும்.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. ”முற்றறிவு” என்பது பிரம்மம் என்ற ஆதிநிலையே எல்லாம் அறிந்த நிலையில் பேரறிவாகவும் இருக்கிறது. அந்நிலையில் நிலைத்து,நிலைத்து அறியும் அறிவாகும்.
    எல்லா அறியவல்லதே முற்றறிவு. இது அடிமனம்(super-consciousness). நாம் அடிமனதில் இருந்துகொண்டே எண்ணும்போது நாம் எண்ணியெதல்லாம் காலமும் வேகமும் வரும்போது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
    லதாஹைஷ்

    ReplyDelete
  3. மிகவும் நன்றி சகோதரி.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  4. பொருள் பொதிந்த வாழ்க்கைத் தத்துவம்.

    ReplyDelete